"‘தால்’ என்றால் நாக்கு. 'நாக்கை' ஆட்டிப் பாடும் பாட்டு 'தாலாட்டு'. "
'ஆரிரரோ’, ‘லுலுலாயி’... என்று வட்டாரத்துக்குத் தகுந்த படி தாலாட்டின் வார்த்தைகள் மாறலாம். ஆனால், தாய்மையின் அன்பு - பாசம் என்பது என்னமோ மாறாது தான். இந்த உலகில் 4,000 வருடங்களாகத் தாலாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தாலாட்டு ஆனது குழந்தைகளுக்கு எண்ணற்ற விதங்களில் நன்மையை செய்கிறது.
ஒரு சில தாலாட்டுப் பாடல்கள் குழந்தைக்கும் உறவினர்களுக்கும் இடையே ஒட்டுதலை, பாசத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். உதாரணத்துக்கு, ‘யாரடிச்சு நீ அழுதே...’ என்ற தாலாட்டில் ஒவ்வோர் உறவின் பெயரையும் குறிப்பிட்டு, `மாமன் அடிச்சாரோ மல்லிகைப்பூ செண்டாலே, தாத்தா அடிச்சாரோ தாமரைப்பூ தண்டாலே, பாட்டி அடிச்சாரோ பாலூட்டும் கையாலே’ என்ற வரிகளில் உறவுகளின் மீதான பாசிட்டிவ் எண்ணம் குழந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்கப்படுகிறது. அதாவது, உறவினர்கள் கோபத்தைக் கூடத் தன்னிடம் வலிக்காமல் தான் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.

0 comments:
Post a Comment