Wednesday, August 29, 2018

குழந்தை உணவு

Posted by K Venkatesh 7288 at 9:51 PM 0 comments

குழந்தை உணவு:

1. 6 மாதம் வரை - தாய்ப்பால் போதும்.

2. 6 மாதம் முதல் - தக்காளி சூப், அரிசி கஞ்சி, பழரசம், ராகி கஞ்சி,சாதம் வடித்த
    கஞ்சியில் உப்புப் போட்டு கொடுக்கலாம்.வெந்த சாதம் 4 பங்கு, வேக
     வைத்த பருப்பு ஒரு பங்கு சேர்த்து குழைவாக கொடுக்கலாம்.

3. 7 மாதம் வரை - இட்லி, வேக வைத்த உருளை, வெண்ணை, சாதம், பருப்பு,
    பொங்கல், உப்புமா, தோசை, பிரட், வாழைப்பழம்.

4. 8 மாதம் முதல் - முட்டை(மஞ்சள்), ஈரல், ஆட்டுக்கால் சூப்.

5. 10 மாதத்திற்கு மேல் - வீட்டில் சாப்பிடக்கூடிய பொருள் எல்லாமே
     கொடுக்கலாம்.

6. ஆப்பிள் தோலை நீக்கி விட்டு வேக வைத்து மசித்து கொடுக்கவும்.

7. சத்து மாவு கஞ்சி, வேக வைத்த கீரை,வேக வைத்து மசித்த கேரட் கொடுக்கவும். 
   

அரிசி மாவு - உப்பு கஞ்சி தயாரிக்கும் முறை:

  1, அரிசி மாவு 2 ஸ்பூன், சிறிது உப்பு, 1 டம்ளர் தண்ணீரில் கொதிக்க
       வைத்து ஆறியதும் கொடுக்கவும்.

குழந்தை மருத்துவம்

Posted by K Venkatesh 7288 at 9:50 PM 0 comments

வயிற்றுபூச்சி நீங்க

   1.    குழந்தைகளுக்கு வேப்பம்பூ கசாயம் கொடுத்து வர வயிற்றுப்பூச்சி
          நீங்கும்.

   2.    மூன்று வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வேப்பங்கொழுந்துடன்
            மஞ்சளை அரைத்து கொடுக்க வயிற்றுப்பூச்சி நீங்கும்.
           

சளி


   1.   துளசி இலையை நீரில் ஊற வைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர
         நினைவாற்றல் அதிகரிக்கும், சளி பிரச்சனை நீங்கும்.

மலச்சிக்கல்


  1.  குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் காய்ந்த திராட்சையை
       வெதுவெதுப்பான சுடு நீரில் ஊற வைத்து, கசக்கி  சாறை மட்டும்
       வடிகட்டி கொடுக்கவும்.

  2.  கீரைவகைகள், பீன்ஸ், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து
       அதிகம் உள்ளது .இவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம்
       மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கலாம்.

இரும்புச்சத்து


  1.  பேரிச்சைப் பழத்தை சுடு தண்ணீயில் ஊற வைத்து விதைகளை நீக்கி
       விட்டு மிக்ஸியில் அடித்து சாறை மட்டும் வடிகட்டி கொடுக்கவும்.
       குழந்தைகள் பேரிச்சை அதிகம் சாப்பிடுவதன் மூலம் இரும்பு சத்து
        அதிகமாக கிடைக்கும்.

  2.   வெல்லம், முறுங்ககீரை, வேர்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றில்
         இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

பற்கள் வலிமை பெற

  1.  குழந்தைகளுக்கு கேரட்டை பச்சையாக சாப்பிட கொடுக்க பற்கள் வலு
        பெறும்.

குழந்தைகளின் ஆரோக்யம்

Posted by K Venkatesh 7288 at 9:46 PM 0 comments
குழந்தை பிறந்தது முதல் மூன்று ஆண்டுகள் வரை நோயிலிருந்து பாதுகாத்து எடுப்பதே பெற்றோர்களுக்கு சிரமம் ஆகிவிடுகிறது. சற்று அசாதாரணமாக கவனிக்காமல் இருந்துவிட்டால் சில சமயங்களில் விளைவுகள் விபரீதமாகவும் நடந்துவிடுகிறது.
குழந்தைகள் ஆரோக்கியத்தைக் கருத்தில்கொண்டு பல மருத்துவர்கள் தரும் ஆலோசனைகளை பெற்றோர்கள் செயல்படுதல் மிக அவசியம். குறிப்பாக குழந்தைகளுக்குத் தரப்படும் தடுப்பூசிகளில் கவனம் கொள்வது மிகவும் அவசியம்.
 
காய்ச்சல், சளி, வயிற்றுவலி ஆகியவைகளுக்கு மருந்து கொடுப்பது போன்றே ஒவ்வொறு காலகட்டத்திலும் பலவிதமான நோய்த் தடுப்பூசிகள் குழந்தைகளுக்குத் தருதலும் பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும். குழந்தைகள் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு வைரஸ் தாக்குதலால் சளி, காய்ச்சல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
 
குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தடுப்பூசிகள் போட்டுவிட வேண்டும். 6 மாதம் வரை குழந்தைக்கு கட்டாயம் தாய்ப்பால் தர வேண்டும். தாய்ப்பாலில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரமுடியும்.
 
குழந்தைகளை நோய்த் தொற்றில் இருந்து காக்க, குழந்தைகள் தூங்கும் இடம், அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி துணியை துவைப்பதோடு அவற்றை வெயிலில் உலர்த்துவதன் மூலம் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
 
தானிய கஞ்சி
 
முழு கோதுமை, கம்பு, கேழ்வரகு, பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர்ந்த திராட்சை, சோயா, நிலக்கடலை, கொண்டைக்கடலை ஆகியவற்றை தலா 50 கிராம் எடுத்து தனித்தனியாக வறுத்து அரைக்கவும். இதில் சர்க்கரை சேர்க்க தேவையில்லை. காய்ச்சிய பாலில் இந்த தானிய மாவைக் கலந்து குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். வழக்கமாக தாய்ப்பாலை அடுத்து புட்டி பால் கொடுக்கும்போது இந்த உணவை துவங்கலாம்.
 
காய்கறி சாதம்
 
கேரட், பீன்ஸ், பீட்ரூட், உருளைக் கிழங்கு, காலிபிளவர் ஆகியவற்றை பொடியாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, இரண்டு ஸ்பூன் அரிசி ஆகியவற்றை ஒன்றாக குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இத்துடன் சீரகம், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி சாதம் குழைய வேக விடவும். வெளியில் எடுத்து சாதத்தை லேசாகக் கடைந்து நெய் சேர்த்து ஊட்டலாம்.
 
ஆப்பிள்
 
ஆப்பிளை நன்றாகக் கழுவி விட்டு ஆவியில் அல்லது நேரடியாக தண்ணீரில் 10 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் தோலை சீவி விட்டு ஆப்பிளை மசித்துக் கொள்ளவும். அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பிசைந்து குழந்தைக்குக் கொடுக்கலாம். தினமும் இப்படிக் கொடுப்பதன் மூலம் எளிதில் ஜீரணம் ஆகும். விரும்பி சாப்பிடும். போதுமான சத்துகள் உடலுக்குக் கிடைக்கும்.

Tuesday, August 28, 2018

குழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்

Posted by K Venkatesh 7288 at 11:34 PM 0 comments

குழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்

ஒவ்வொரு பெற்றோரும், தாங்கள் ஈன்றெடுத்த குழந்தைகளை 
நன்முறையில், பராமரித்து வளர்க்க வேண்டும்.  சிறந்தமுறையில்
 வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் 
பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை 
மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் 
சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை. ஆகையால், 
குழந்தைகளை பராமரிக்க வேண்டிய முறைகள் மற்றும் 
குறிப்புகள் குறித்து, இப்பதிப்பில் படித்தறிவோம்..!
1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. 
ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில்
 இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் 
குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் 
வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், 
மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து 
அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
2. இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் 
சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு 
வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். 
பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், 
கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் 
போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் 
செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். 
செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் 
குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் 
தவறு இல்லை.
3. சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி 
உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை 
அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு
 கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத்
 தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். 
வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை 
அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் 
பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு 
முதல் பத்து சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது
 ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை 
மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு 
வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் 
கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ 
மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.
4. ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை 
மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட 
அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. 
அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் 
கொடுப்பது நல்லது.
5. மொட்டைமாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் 
சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு 
சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற 
வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். 
குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின்
 மனவலிமை அதிகரிக்கும்.
6. தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, 
தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை
 மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக்
 கற்றுக்கொடுக்க வேண்டும்.
7. ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின்
 சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே 
செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் 
அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும்
 சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும்.
 அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.
8. குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல 
செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து 
ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த 
உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே, அவர்கள்
 தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத்
 தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு 
கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.
9. மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் 
எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் 
காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் 
காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள்.
 இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை
 உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் 
குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.
10. தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு 
ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் 
சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் 
ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் 
தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு
 விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் 
என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.
 

BABIES SMILEY Template by Ipietoon Blogger Template | Gift Idea